| |
|
| மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
| 46. திருப்படையெழுச்சி |
| தில்லையில் அருளியது |
| பிரபஞ்சப் போர் |
| கலிவிருத்தம் |
ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. |
1 |
தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம்நாம் அல்லற்படை வாராமே. |
2 |
| திருச்சிற்றம்பலம் |
மேலே செல்க
முன்பக்கம்
|
|
|